ஒரு பெண் என்னதான் நான்கு வேதங்களையும் கரைத்துக் குடித்தாலும் அவளால் மடாதிபதியாக அல்ல, நம் தெருமுனைக் கோயில் பூசாரியாகக் கூட ஆகமுடியாது.
குரானை தலைகீழாக தெரிந்துவைத்திருந்தாலும் ஒரு முஸ்லீம பெண், மதபோதககராக முடியாது.
பைபிள் படித்தே வாழ்க்கையை களித்தாலும் ஒரு பெண்ணால் போப்பாண்டவர் ஆகமுடியாது.. கோட்பாடுகளைவிட பாகுபாடுகள் அதிகம் கொண்டன மதம். அனைவருக்குமான ஆன்மிக தேடல் மதத்தின் வழி சாத்தியமா ?
சடங்குகளும், வழிபாடுகளும், போற்றுதலும் மதத்தின் பண்புகள். இந்த ஆகமங்களையும், சடங்குகளையும் தெரிந்து கொள்வது ஆன்மிகமா ?

பெருமாள் போல் பெரிய தெய்வங்கள் கோவில்களில் வசதியாக உள்ளிருக்க, அய்யனார், கருப்பசாமி, கருப்பணசாமி எல்லாம் ஊருக்கு வெளியில் மொட்டை வெயிலில் நிற்கிறார்கள். இதில் எந்த தெய்வத்தை வணங்குவது ஆன்மிக தேடலாக இருக்கும் ?
இல்லை "வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேனே" என்று வள்ளலார் மனமிறங்கும் மனிதநேயம் தான் ஆன்மிகமா ?