"கண்ணா ..நீ கடவுள்.. முதலிலேயே என்னை நீ காத்திருக்கலாம் அல்லவா ? சேலை களையும் வரை ஏன் காத்திருந்தாய் ?" என்றாள். கண்ணன் "முதலில் நீ நியாயம் கேட்டு வார்த்தையால் போராடினாய்.. பின் உன் கணவனை காப்பாற்ற அழைத்தாய்.. பின் உன் கைகளால் சேலையை பற்றி போராடினாய்.. பின் பற்களால் அவற்றை கவ்விப்பிடித்துப் பார்த்தாய்.. முடிவிலேயே முழுவதுமாக உன்னை நம்பாமல் என்னை மட்டும் நம்பி கண்ணா என்ற அழைத்தாய்.. நான் அப்போது வந்து காத்தேன்" என்கிறார். இது சரணாகதி தத்துவம். கீதை எங்கும் நிறைந்து காணப்படுவது சரணாகதி தான்.

"பாஞ்சாலி சபையினிலே
பாரதி இருந்திருந்தால்
கண்ணன் வரும்வரையா காத்திருப்பான்.
தன் தலைப்பாகை தந்து தன்மானம் காத்திருப்பான்.."
என்பது புதுக்கவிதை.!